Saturday, August 29, 2015

கணிதப் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை



கணிதப் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அணுசக்தித் துறையின்கீழ் இயங்கும் நேஷனல் போர்டு ஆப் மேத்மேட்டிக்ஸ் முதுநிலைப் பட்டப்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை வழங்குகிறது. தகுதிகள்: பிஏ, பி.எஸ்.சி பட்டப் படிப்புகளில் முதல் வகுப்பிலும், பி.எஸ்.சி ஆனர்ஸ் படிப்பை முடித்தவர்கள் குறைந்தது இரண்டாம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு: உதவித்தொகையை பெற, செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டும். அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். குறிப்பு: NBHM MA/Msc Scholarship என்று விண்ணப்ப உறையில் குறிப்பிட்டு ஜூலை 31ம் தேதிக்குள் கிடைக்கும்படி அணுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு: www.nbhm.dae.gov.in , www.imsc.res.in

ஜியோஇன்பர்மேட்டிக்ஸ் படிக்க விருப்பமா?



சென்னை பல்கலைக்கழக, புவியியல் துறையில் வழங்கப்படும் எம்.எஸ்சி.,(ஜியோஇன்பர்மேட்டிக்ஸ்) சுயநிதி படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதிகள்: இளநிலை பட்டப்பிரிவான, பி.ஏ மற்றும் பி.எஸ்.சி..,யில் புவியியல்,புவியமைப்பியல்,இயற்பியல்,சுற்றுச்சூழல் அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், ரிமோட் சென்சிங் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை, முதன்மை பாடமாக கொண்டு, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


அஸ்ட்ரோபிசிக்சில் பட்ட மேற்படிப்புகளை எங்கு படிக்கலாம்?



* உஸ்மானியா பல்கலைக்கழகம்இதில் 2 ஆண்டு எம்.எஸ்சி அஸ்ட்ரோபிசிக்ஸ் படிப்பு தரப்படுகிறது. பி.எஸ்சி இயற்பியல் தகுதி. நுழைவுத் தேர்வு மூலமாக அனுமதி.
* சுவாமி ராமானந்த் தீர்த்த மரத்வாடா பல்கலைக்கழகம், தியானதீர்த்தம், கவுதமி நகர், விஷ்ணுபுரி, நான்டெட் 431 606. எம்.எஸ்சி அஸ்ட்ரோபிசிக்ஸ் படிப்பு தரப்படுகிறது. பி.எஸ்சி இயற்பியல் தகுதி. நுழைவுத் தேர்வு மூலமாக அனுமதி.
* ஸ்கூல் ஆப் பிசிக்ஸ் அண்ட் அப்ளைட் பிசிக்ஸ், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், பிரியதர்சினி ஹில்ஸ், கோட்டயம் 686 560. இதில் எம்.எஸ்சி இயற்பியல் படிப்பில் அஸ்ட்ரோபிசிக்ஸ் சிறப்புப் பாடமாகத் தரப்படுகிறது.
* இண்டர் யுனிவர்சிடி சென்டர் பார் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸ், புனே. 


மனம் திறந்து பேசுங்கள்!


பெயர் பெற்ற பிரபலமான கல்லூரியில் படித்தால் தான் மாணவன் பொறியியல் படிப்பை வெற்றிகரமாக முடிப்பான் என்று பெற்றோர்கள் கருதுகின்றனர். ஒரு மாணவன் வெற்றி பெற கல்லூரியோ, ஆசிரியர்களோ, வசதிகளோ, சூழ்நிலையோ மட்டும் கிடையாது. இவற்றையும் கடந்து, நிறைய விஷயங்கள் உள்ளன!
பெற்றோருக்கே பெரும் பங்கு
கல்லூரியில் வசதிகள் எப்படி? உணவு வகைகள் என்ன? நான்கு ஆண்டு முடிவில் வேலைவாய்ப்பு கிடைக்குமா? என்றெல்லாம் தான் பெற்றோர் கேட்கின்றனறே தவிர, இந்த கல்லூரியில் சேர்த்தால், ஒழுக்கமான பொறியாளனாக வருவானா என்று எந்த பெற்றோரும் கேட்பதில்லை! சமுதாயத்திற்கு ஒரு ஒழுக்கமான பொறியாளனை உருவாக்கித்தர வேண்டும் என்றால் அதில் பெற்றோர்களின் பங்கு தான் மிக அதிகம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு மாணவன் தினமும் அதிகபட்சம் 8 மணிநேரம் மட்டுமே கல்லூரியில் செலவிடுகிறான். அந்த 8 மணிநேரத்தில் கல்வியை மட்டுமே ஒரு கல்லூரியால் தரமுடியும். அதையும் கடந்து சில விஷயங்களை மாணவனுக்கு தரமுடியும் என்றால், ஓரளவுக்குத் தான் சாத்தியம். ஆனால், மாணவர்களிடம் 4 ஆண்டுகளுக்குள் மிகப்பெரிய மாற்றத்தை பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் விளைவு, மாணவனுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
கல்லூரிகளும் அடக்கி வைக்கிறோம் என்ற பெயரில், மாணவர்களை பேசவே விடாமல் செய்கின்றன. மாணவர்களை மாணவர்களாக பார்க்க வேண்டும். மாணவர்களை நம்பியே கல்லூரி; கல்லூரியை நம்பி மாணவர்கள் இல்லை!
நடுக்கம் வேண்டாம்
நான்கு ஆண்டு காலத்தில் அதிக மதிப்பெண் எடுத்து ஒரு நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்றுதான் மாணவர்களும் நினைக்கிறார்களே தவிர, நூலகத்தை சிறந்த முறையில் பயன்படுத்துதல், ஒரே பாடத்தை நான்கு ஆசிரியர்கள் எழுதியதை ஒப்பிடுதல், அதிலிருந்து புரிந்துகொள்ளுதல் போன்றவற்றில் ஆர்வம் காட்டவேண்டும்.
மற்றவர்களுடன் தன் மகனையோ அல்லது மகளையோ ஒப்பிடும் முன்பாக, ஒவ்வொருவருக்குமான ஆர்வம், குணாதியம் வேறுபட்டிருக்கும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இதற்கு மாணவர்களும், பெற்றோரும் மனம் திறந்து பேச வேண்டும். ஆனால், இன்றைய மாணவர்கள் பேசுவதேயில்லை.
ஆசிரியர் நடத்திக்கொண்டிருக்கும் பாடம் தனக்கு புரியவில்லை என்று தனது நண்பர்களிடம் கூட சொல்ல வெட்கப்படும் மாணவன் ஆசிரியரிடம் எப்படி தைரியமாக சொல்வான்? வகுப்பில் எதுவுமே பேசமால் அமைதியாக இருப்பதை விட, ‘பாடங்களை கவனித்தேன் ஆனால் எனக்கு இந்த பாடம் புரியவில்லை; வேறுவிதமாக நடத்துங்கள்என்ற சொல்வது ஆசிரியருக்கு நிச்சயம் சந்தோஷத்தைத் தான் தரும்.
புரியவில்லை என்று சொல்வது எனக்கு மட்டுமே புரியவில்லை என்றாகிவிடுமோ என்று பயப்படவேண்டாம். எனக்கு இது பிடித்திருக்கிறது என்று சொல்லும் மாணவனைவிட, இது எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லும் மாணவன் தான் பொறியியல் துறையில் சாதிக்க முடியும்!

நன்றி: கல்விமலர்