அரசு வேலைவாய்ப்புக்கு இருக்கும் மவுசைப் போலவே தனியார் வேலைவாய்ப்புக்கும் தற்போது மவுசு கூடியிருக்கிறது. கொடுக்கும் சம்பளமும் மற்றும் இதர வசதிகளும்தான் தனியார் வேலைவாய்ப்புக்கு மாணவர்கள் சுண்டி இழுக்கிறது.
தற்போது பொயியியல் படிப்பில் பல்வேறு பிரிவுகளில் படித்து வெளிவரும் மாணவர்கள் பெரிதும் விரும்புவது பிபிஓ. வேலை மற்றும் ஐ.டி வேலைகளைத்தான். கஷ்டப்பட்டு வேலை பார்ப்பதைத் தான் இன்றைய தலைமுறையினர் விரும்புகிறார்கள் என்பதற்கு ஐ.டி பணியில் சேரும் இணைஞர்களின் எண்ணிக்கைதான் சாட்சி.
பொறியியல் படிப்பு படித்திருந்தால் மட்டும் தான் தனியார் பணியில் கொடிக்கட்டி பறக்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2, ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப் படிப்பு போன்ற குறைந்தபட்ச படிப்பு படித்திருந்தாலே போதும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேர முடியும். அந்த வகையில் இந்த இ-பப்ளிஷிங் துறைப் பற்றியும், அதில் குவிந்து கிடக்கும் வேலை வாய்ப்பு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
வளர்ந்த நாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்கள், இந்தியா போன்று பல்வேறு பணி வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் பி.பி.ஓ.வும், கே.பி.ஓ.வும் இந்திய இளைஞர்களுக்கு பல்வேறு பணி வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
BPO எனப்படும் (Business Process Outsource) என்பது வர்த்தக அயல்நாட்டு பணி என்றும் KPO (Knowledge Process Outsource) என்பதை அறிவுசார் அயலக பணி என்றும் சொல்கிறோம்.
பி.பி.ஓ மூலமாக அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து போன்று உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆன்லைன் வழியாக பல்வேறு பணிகள் இந்தியாவுக்கு வருகின்றன. ஆன்லைனில் வரும் பணியை பதிவிறக்கம் செய்து, கொடுக்கப்பட்டிருக்கும் பணியை சரியாக செய்து முடித்து மறுபடியும் அனுப்புவது. இதற்கு கணினி, இணையதளம் மற்றும் வலைத்தளம் முக்கிய பங்காற்றுகிறது.
இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பெரிய நகரங்களில் பிபிஓ மற்றும் கேபிஓ பணிகள் தற்போது கொடிக்கட்டி பறக்கிறது. இ-பப்ளிஷிங் துறையைப் பொறுத்த வரையில் Elsevier, Springer, Science Business Media, Black Well, John Wiley, Kluwer, Taylor & Francis etc...போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், மிகவும் நம்பகத்தன்மையான இந்தியாவில் செயல்பட்டு வரும் இ-பப்ளிஷிங் நிறுவனங்களாகும். இந்தப் பெயர்களை ஏன் இங்கு சொல்கிறோம் என்றால், இளைஞர்களின் உழைப்பை முற்றிலும் சுரண்டி அவர்களுக்கு சரியான ஊதியம் வழங்காத நிறுவனங்களும் ஒரு சில இயங்கி வருவதால் தான்.
இ-பப்ளிஷிங் என்றால் என்ன?
நமக்கு தெரிந்து எல்லாம் அச்சகத்தில் எழுத்துக்களை கோர்த்து, அச்சு அடித்து புத்தக வடிவிலோ, நோட்டீஸ்சாகவோ, சுவரொட்டி வடிவங்களாக வட்டும்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இ-பப்ளிஷிங் என்பது நாம் மேலே பார்த்த புத்தக்ங்கள், ஆராய்ச்சிக் வரலாற்று விஷயங்கள் எல்லாவற்றையும் கணினியில் டைப் செய்து இ-பப்ளிஷிங்க மூலம் இணையதளத்தில் வெளியிடுவார்கள்.
என்னென்ன துறைகள் இருக்கின்றன?
எடிட்டோரியல், மாஸ்டர் காப்பியிங், புரடக்ஷன் எடிட்டர்- காப்பி எடிட்டர், ஆர்ட்ஒர்க், ஸ்கேனிங், பக்க வடிவமைப்பு, லேங்குவேஜ் எடிட்டர், தரக்கட்டுப்பாட்டாளர், டேட்டா செட் போன்ற பிரிவுகளின் கீழ் பணிகளில் சேரலாம்.
கல்வித் தகுதிகள் என்ன?
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
பட்டர் படிப்பு, முதுகலைப் பட்டப் படிப்பு மட்டுமில்லாமல், எம்.பில். பி.எச்டி. படித்த மாணவர்களுக்கும் இ-பப்ளிஷிங் துறையில் கை நிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு இருக்கிறது.
இந்தப் பணியில் பகுதி நேரமாகவோ அல்லது முழுநேரமாகவோ சேர்ந்து கொள்ளலாம்.
ஊதியம் எப்படி?
படிப்பிற்கு தகுந்தாற் போல் ஊதியம் நிர்ணயிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment