Tuesday, January 7, 2014

உதவித் தொகையுடன் அறிவியல் படிப்பு


பொதுவாக அறிவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாகவே இருக்கிறது. பொறியியல், மருத்துவப் படிப்புகளைத் தாண்டி யோசிப்பதே அரிதாகி வருகிறது. அதனால் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச் (IISER) கல்வி நிறுவனம், இது தொடர்பான படிப்புகளை வழங்கி வருகிறது. புனே, போபால், கொல்கத்தா, மொஹாலி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இக்கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கவும் மாணவர்கள் ஆர்வம் காட்டலாம்.
IISER எனப்படும் இந்தக் கல்வி நிறுவனம், பி.எஸ்.-எம்.எஸ்., பிஹெச்.டி மற்றும் ஒருங்கிணைந்த பிஹெச்.டி உள்ளிட்ட படிப்புகளை வழங்குகின்றன. 5 ஆண்டு பி.எஸ்.-எம்.எஸ். படிப்பு, இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, பிளஸ் 2 படிக்கும்போதே இந்தப் படிப்பு பற்றியும் மாணவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.
IISER நிறுவனத்தில் பி.எஸ்.-எம்.எஸ். படிப்பதில் வித்தியாசம் உண்டு. இப்படிப்பில் சேரும் மாணவர்கள், முதல் 2 ஆண்டுகளில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களைப் படிப்பார்கள். இதன்மூலம், எந்தப் பாடத்தில் தங்களுக்கு நல்ல திறன் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மாணவர்களுக்குப் போதுமான நேரம் கிடைக்கும்.
அடுத்த 3 ஆண்டுகளில், தங்களுக்கு விருப்பமான பாடத்தைத் தேர்வுசெய்து, அதை விரிவாகப் படிப்பார்கள். மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் 5 ஆண்டு காலத்துக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. IISER கல்வி நிறுவனத்தில், தமிழகத்திலிருந்து வெறும் 5 சதவீத மாணவர்கள் மட்டுமே சேர்கிறார்கள். நுழைவுத் தேர்வு, மாணவர் சேர்க்கை, உதவித்தொகை உள்ளிட்ட விரிவான விவரங்களை http://www.iiser-admissions.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

பிளஸ் - 2 முடித்தவுடன் மாஸ்டர் டிகிரி படிக்கலாம்!

பிளஸ் 2 முடித்தவுடன் பட்டப்படிப்பு மட்டுமல்ல பட்டமேற்படிப்பு படிக்கவும் வாய்ப்பு உள்ளது. இன்டகிரேட் எம்.எஸ்சி. புரோகிராம் மற்றும் இன்டகிரேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் ஆகிய பட்டமேற்படிப்புகள் உள்ளன. இப்படிப்பில் சேர கடும் போட்டி நிலவுவதால், இதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளன. படித்து முடித்தவுடன் பணி வாய்ப்பு அளிக்க அரசுத் துறையும், தனியார் துறையும் தயாராக இருக்கின்றன. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே, நுழைவுத் தேர்வுக்கு தயாராவதன் மூலம் வெற்றி நிச்சயம். ஆங்கில வழியில் இதற்கான தேர்வை நடத்துகின்றனர்.
பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களை எடுத்தவர்கள், இன்டகிரேட் எம்.எஸ்சி, புரோகிராம் ஐந்தாண்டு பட்ட மேற்படிப்பை படிக்கலாம். நேஷனல் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட் (NEST) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்திய அரசின், டிபார்ட்மென்ட் ஆஃப் அடாமிக் எனர்ஜி மேற்பார்வையில், இந்த நுழைவுத் தேர்வை புவனேஸ்வரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் எஜூகேஷன் அண்டு ரிசர்ச், மும்பையில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் மும்பை சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் பேசிக் இன் சைன்ஸ், மேற்கு வங்காளத்தில் உள்ள இன்டகிரேட் சைன்ஸ் எஜூகேஷன் அண்டு ரிசர்ச் சென்டர் ஆகிய மூன்று அரசு கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.
இந்த மூன்று கல்வி நிறுவனங்களில் மொத்தம் 156 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்தியா முழுவதும் இருந்து பல லட்சம் மாணவர்கள், இத்தேர்வை எழுதுகின்றனர். வரும் மே 31ம் தேதி நெஸ்ட் நுழைவுத் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் மதுரை, சென்னை ஆகிய இரு தேர்வு மையங்கள் உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஆன்-லைன் மூலம் (www.nestonline.in) வரும் பிப். 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத் தேர்வு அப்ஜெக்டிவ் டைப் கேள்விகளை கொண்டது. கட்டாயமான முதல் பிரிவு பொது அறிவு திறன் தேர்வுக்கு மட்டும் நெகடிவ் மார்க் கிடையாது. இரண்டாவது பிரிவில், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு பிரிவில், ஏதாவது மூன்று பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து, தேர்வு எழுத வேண்டும். தேர்வில் வெற்றி பெற்று கல்லூரியில் சேரும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக 5000 ரூபாயும், ஆண்டுக்கு ஒரு முறை மே மாத சம்மர் புராஜெக்ட்டிற்கு 20,000 ரூபாய் அரசு அளிக்கிறது. அறிவியல் துறை சார்ந்த பட்டமேற்படிப்பு என்பதால், சகலவித அரசு, தனியார் துறைகளிலும் வேலை அளிக்க காத்திருக்கின்றனர்.
பிளஸ் 2 முடித்ததும், மேனேஜ்மென்ட் பட்டமேற்படிப்பு படிப்பவர் களுக்காக, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - இண்டூர் மூலம் இன்டகிரேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வு நடத்துகிறது. இதற்கு மே மாதம் தேர்வு நடத்தப்படுகிறது. வரும் ஏப்., இரண்டாவது வாரத்திற்குள், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு மொத்தம் இரண்டு மணி நேரம், 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. அப்ஜெக்டிவ் வகை கேள்வியை கொண்டுள்ளது. இண்டூர், பெங்களூரு, மும்பை, டெல்லி, கோல்கத்தா, ஐதராபாத் ஆகிய பெரு நகரங்களில் மட்டுமே இதற்கான நுழைவுத் தேர்வு நடக்கிறது.
இந்தாண்டு சென்னையில் இதற்கான நுழைவுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளனர். பொறியியல் பயிலும் மாணவர்கள் ஐ.ஐ.டி.யில் இணைந்து படிக்க ஆசைப்படுவதைப் போன்று, எம்.பி.ஏ. படிக்க விரும்புபவர்களின் கனவாக, ஐ.ஐ.எம். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று பயில ஆசைப்படுகின்றனர். மொத்தம் 120 இடங்களுக்கு கடும் போட்டி உள்ளதால், தேர்வுக்கு நன்றாக தயாராவது அவசியம். இவ்விரு நுழைவுத் தேர்விலும் வெற்றி பெறுபவர்கள், வாழ்க்கையில் மேன்மை அடைவது நிச்சயம்.

Sunday, January 5, 2014

வெளிமாநில மருத்துவ இட ஒதுக்கீட்டை பெற...


உயர்நிலைப் பள்ளியில் உயிரியல், இயற்பியல், வேதியியல் பிரிவை தேர்ந்தெடுத்துப் படித்துள்ள மாணவர்கள் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் சேரலாம்.

மருத்துவ கல்வி நிறுவனங்களில் வெளிமாநில மாணவர்கள் படிக்கும் வகையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இவற்றை நிரப்ப தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. தமிழக மாணவர்கள் வெளிமாநில கல்லூரிகளிலும் சேர்ந்து படிப்பதற்கு வசதியாக எந்தெந்த கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் விவசாயம் சார்ந்த படிப்புகளில் இடம் ஒதுக்கப்படுகிறது என்பதைப் பற்றியும், தேசிய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளைப் பற்றியும் பார்ப்போம்.

1. ஆல் இந்தியா பிரி மெடிக்கல்/டென்டல் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்: இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை மெடிக்கல்/டென்டல் கல்லூரிகளில் 15 சதவீத இடங்கள் மெடிக்கல்/டென்டல் படிப்புகளில் இந்த நுழைவுத்தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இது ஜம்முகாஷ்மீர் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் இல்லை.இந்த மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மெடிக்கல்/டென்டல் கல்லூரிகளில் உள்ள மொத்த காலியிடங்கள் அங்கு சேரும் அந்த மாநில மாணவர்களுக்கு தேவைப்படும் இடங்களை விட குறைவாக உள்ளன. எனவே இந்த மாநிலங்களில் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவதில்லை. இதில் வெற்றி பெறுவதற்கேற்ப மாணவர்கள் சிறப்புப் பயிற்சி எடுக்க வேண்டும். இத்தகைய பயிற்சிகள் நாட்டின் அனைத்து மருத்துவ நுழைவுத்தேர்வுகளுக்கும் பொருந்தும்.

2. ஏ.ஐ.ஐ.எம்.எஸ்., (ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்), அன்சாரி நகர், நியூடில்லி -110608, டில்லி. தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு வழியாக நிரப்பப்படுகிறது.

3. வேலூர் மற்றும் லூதியானாவில் உள்ள ‘சி.எம்.சி.,’ (கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி): இங்கு மருத்துவம், பிஸியோதெரபி, ஆக்குபேஸனல் தெரபி, நர்ஸிங், மெடிக்கல் லபாரட்ரி டெக்னாலஜி போன்ற பல இளங்கலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். இந்த கல்லூரியில் கிறிஸ்தவ மாணவர்களுக்கென இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. சில தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி சான்றிதழ்கள் வழங்குகின்றன. இந்த கல்வி நிதி உதவி சான்றிதழ்களை கிறிஸ்தவ மாணவர்கள் பெற வேண்டுமெனில் ‘பைபிள் நாலெட்ஜ் டெஸ்ட்’ தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

4. ஜிப்மர் (ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேஷன் அண்டு ரிசர்ச்), புதுச்சேரி. நுழைவுத்தேர்வு வழியாக இடம்.

5. ராணுவ மருத்துவ கல்லூரி, புனே (ஆர்ம்டு போர்ஸஸ் மெடிக்கல் காலேஜ்). இக்கல்லூரியில் 105 மாணவர்கள், 25 மாணவிகள் உட்பட மொத்தம் 130 மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். இங்கு சேர கல்விக்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இக்கல்லூரி தங்கும் வசதி, உணவு, புத்தகங்கள், சீருடைகள், மாணவர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் கல்லூரியில் இருந்து வீட்டுக்கும், திரும்ப கல்லூரிகளுக்கு வருவதற்கும் ஏ.சி.,மற்றும் 3 அடுக்கு இருக்கை வசதி கொண்ட ரயில்களில் பயணம் போன்ற அனைத்தும் இலவசமாக மாணவர்களுக்கு வழங்குகிறது. இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் ராணுவத்தில் சேர்ந்து பணி புரிவதற்குரிய உடல் திறன் மற்றும் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். இங்கு படிப்பவர்கள் ராணுவ மருத்துவமனைகளில் பணிபுரியலாம்.

6. மருத்துவ அறிவியல் நிறுவனம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரனாசி: எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.எ.எம்.எஸ்., (ஆயுர்வேதம்) போன்ற படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தேர்வுகள் நடத்துகிறது.

7.மகாராஷ்டிரா மாநிலத்தின் வார்தா மாவட்டத்தில் உள்ள சேவாகிராமில் செயல்படும் ‘தி மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்’ கல்வி நிறுவனம் மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்துகிறது. இதில் காந்திய சிந்தனை பற்றி விரிவாகவும், உயிரியல், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் கொள்குறி வகையிலும் தேர்வு நடைபெறும். பொதுவாக இந்த நுழைவுத்தேர்வு ஐதராபாத், நாக்பூர், மும்பை, டில்லி போன்ற நகரங்களில் நடத்தப்படுகின்றன.

8. பாரதிய வித்யாபீட பல்கலைக்கழகம்: புனே மற்றும் சாங்லி மாவட்டங்களில் உள்ள இந்த மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்களின் வயது மற்றும் கல்வித்தகுதி ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை மிக எளிமையாக உள்ளது.
சில கல்வி நிறுவனங்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படலாம்.

9. மணிப்பால் பல்கலைக்கழகம்: கர்நாடக மாநிலத்தின் மணிப்பால் மற்றும் மங்களூருவில் உள்ள கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரிகள்.

10. ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட், போரூர், சென்னை- 600 116. - இந்தக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., /பி.டி.எஸ்.,/பி.பி.டி.,/பி.எஸ்சி., நர்ஸிங்/பி. பார்ம்/பி.எஸ்சி., ஸ்பீச் அண்டு ஹியரிங் போன்ற பட்டப்படிப்புகள் உள்ளன.

11. அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், தமிழ்நாடு: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., மற்றும் பி.எஸ்சி நர்ஸிங்., போன்ற படிப்புகளுக்கு நுழைவு தேர்வு உள்ளன.

12. ஆல் இந்தியா அக்ரிகல்சுரல் என்ட்ரன்ஸ்: ‘ஐ.சி.ஏ.ஆர்.,’ (இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சுரல் ரிசர்ச்)நிறுவனம் தேசிய அளவில் நடத்தும் பொது நுழைவுத் தேர்வு மூலம் பொதுத்துறை கல்வி நிறுவனங்களில் 15 சதவீதம் இடங்கள் நிரப்பப்படுகின்றன.

இதன்மூலம் விவசாயம், தோட்டக்கலை, பாரஸ்ட்ரி, பிஷரிஸ், பட்டுப்பூச்சி வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேரலாம். இந்த ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் 41 மாநில அரசு விவசாய பல்கலைக்கழகங்களும், மத்திய அரசு விவசாய பல்கலைக்கழகமும் (இம்பால்), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், விஸ்வ பாரதி மற்றும் நாகலாந்து பல்கலைக்கழகங்கள் போன்ற விவசாயக்கல்வி ஆசிரியர்கள் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் போன்றவை அடங்கியுள்ளன.

அரியானா மாநிலம், கர்னல் மாவட்டத்தில் உள்ள ‘நேஷனல் டைரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ல் உள்ள பாடப்பிரிவுகளில் ‘டைரி சயின்ஸ்’ என்ற பட்டப்படிப்பில் உள்ள அனைத்து இடங்களுக்கும் இந்த நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்தே மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ‘நேஷனல் டேலன்ட் ஸ்காலர்ஷிப்’ (என்.டி. டி.,) எனப்படும் தேசிய அளவில் கொடுக்கப்படும் உதவித்தொகைகளுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட இதில் பெறப்படும் மதிப்பெண்கள் உதவும்.‘ ஐ.சி.ஏ.ஆர்’ மற்றும் ‘எஸ்.ஏ.யு.,’(ஸ்டேட் அக்ரிகல்சர் யுனிவர்சிட்டி) ஆகியவற்றின்கீழ் செயல்படும் எந்த பல்கலைக்கழகங்களிலும் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் இத்தகைய நுழைவுத்தேர்வில் தேர்வு பெற்றிருந்தால் மாதம் தோறும் ‘என்.டி.எஸ்’ ரூ.1000 (ரூ.ஆயிரம் மட்டும்) வழங்கப்படும். வெளி மாநிலங்களில் சென்று படிக்கும் மாணவர்களுக்கும் இத்தகைய உதவித்தொகை வழங்கப்படும்.

13. ஆல் இந்தியா வெட்ரினரி என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்: நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை கல்வி நிறுவனங்களில் ‘பி.வி.எஸ்சி., அண்டு ஏ.ஹெச்.,’ (பேச்சிலர் ஆப் வெட்ரினரி சயின்ஸ் அண்டு அனிமல் ஹஸ்பண்ட்ரி) படிப்பில் 15 சதவீத இடங்கள் இந்த நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. அகில இந்திய அளவில் நடைபெறும் இத்தகைய பொது நுழைவுத்தேர்வை ‘வெட்ரினரி கவுன்சில் ஆப் இந்தியா’ நடத்துகிறது. இத்திட்டத்தின்கீழ் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலம் இன்னும் வரவில்லை. கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெறும் மாணவர்களுக்கு வருமானம் குறைவாக உள்ளது.

மருத்துவ முதுகலைப் பட்டம் பெற்றவர்களிடமோ, மருத்துவ நிபுணர்களிடமோ சென்றுதான் நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் இந்த கால்நடை மருத்துவத்துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் கூட சாதிக்கலாம். இத்துறையில் முதுகலைப்பட்டப்படிப்புகளிலும் மாணவர்கள் சேர்ந்து எளிதில் தேர்ச்சி பெறலாம். இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் பலர் சாதனை புரிந்து வருகின்றனர்.

அரசு கால்நடை மருத்துவநிறுவனங்கள், கால்நடைப் பண்ணை, பால் பண்ணை, கோழிப் பண்ணை, பன்றிப் பண்ணைகள், மிருகக்காட்சி சாலைகள், தனியார் கால்நடை மருத்துவமனைகள், ராணுவக் கால்நடை மருத்துவமனைகள், மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விலங்கு பாதுகாப்புத் துறைகள், சரணாலயங்கள், குதிரைப்பந்தயம் நடைபெறும் இடங்கள், கால்நடை உற்பத்தி மையங்கள், ஆய்வுக்கூடங்கள் மற்றும் பல நிறுவனங்களுக்கு கால்நடை மருத்துவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. தனியார் நிறுவனங்களில் கால் நடை மருத்துவர்களுக்கு சிறப் பான எதிர்காலம் உள்ளது.
நன்றி: கல்விமலர்
How to apply for All India Pre-Medical Test (AIPMT) 2014

entral Board of Secondary Education (CBSE), New Delhi is set to conduct All India Pre-Medical Test (AIPMT) for the year 2014, on 4th May. AIPMT 2014 entrance examination is conducted for admissions to MBBS and BDS courses in Medical colleges across India. CBSE has started the online registration for AIPMT 2014 examination. Eligibility Criteria: Candidates must have passed 10+2 in science discipline from any of the recognised board of examination. He / she has completed age of 17 years at the time of admission or will complete the age on or before 31st December 2014.

How to apply: Candidates have to apply online for AIPMT 2014. Candidates must follow the instructions strictly as given in the information bulletin and on website. Fill in the on-line application form Part-I and note down the registration number. Upload images of photograph and signature in JPG format at Part-II of the application. Make payment of fee through Debit / Credit Card or download Challan for payment in the designated accounts of Canara Bank / Syndicate Bank/e-Post Office at Part III. AIPMT 2014 Exam Pattern Take print out of Confirmation page(s) at Part IV of online application format to send to CBSE along with copy of proof of fee deposited, if fee is deposited through Challan mode. Candidates must have to take four copies of confirmation page of the online application, for further use in future. Candidates have to keep original receipt issued by post office for having dispatched the application form. Proof of fee paid. The completed application form must reach the below address. Application form: For General / OBC candidates: Rs 1000/-. For SC / ST / PH candidates: Rs 550/-. The fee can be paid through Credit Card / Debit Card / Challan by depositing in CBSE account with Canara Bank or Syndicate Bank. Important Dates: Last date for receipt of confirmation page of application form in CBSE on 10 Jan 2014. Last date for receipt of confirmation page of application form in CBSE from remote areas on 20 Jan 2014. AIPMT 2014 examination will be held on 4th May 2014. Contact Details: The Assistant Secretary (AIPMT), Central Board of Secondary Education, Shiksha Kendra, 2, Community Centre, Preet Vihar, Delhi - 110092.

http://aipmt.nic.in/aipmt/Welcome.aspx

வளமான வாழ்வு தரும் வண்ண ஓவியப் படிப்பு


சித்தன்ன வாசல் சிற்ப ஓவியம், அஜந்தா, நாளந்தா குடவரை ஓவியங்கள், உலகப் பிரசித்தி பெற்ற மோனலிசா உருவ ஓவியம் என ஓவியக் கலைக்கு பல நூற்றாண்டுகளாக முக்கியத்துவம் இருந்து வருகிறது. உலகம் போற்றும் சிறந்த கலைஞராக உருவாக ஆசைப்படுபவர்களுக்கு சென்னை, பூந்தமல்லி சாலையில் உள்ள கவின் அரசுக் கலைக் கல்லூரியில் கலைத்துறை சார்ந்த பாடப்பிரிவுகள் உள்ளன.
கலைப் படிப்பு படிக்க தனி ஆர்வம் வேண்டும். பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மனதுக்கு பிடித்த படிப்பை படிக்க விரும்புவர்கள் இதனை எடுத்து படிக்கலாம். இதற்கு பெற்றோர் தரப்பில் முழு ஆதரவு அளிக்க மறுக்கும் எண்ணம் தவறானது. எத்துறையிலும் சாதிக்கும் வல்லமை, அத்துறை மீதான ஆர்வத்தால் மட்டுமே முடியும் என்பதை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும்.
அரசு கவின் கலைக் கல்லூரி
1852-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் பேச்சுலர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் பட்டப் படிப்பில் பல்வேறு படிப்புகள் உள்ளன. வண்ணக் கலை (பெயிண்ட்டிங்) 20 இடங்கள், சிற்பக் கலைக்கு 10 இடங்கள், காட்சி வழி, தொடர்பு வழி அமைப்பு (விஷுவல் கம்யூனிகேஷன் டிசைன்) 20 இடங்கள், பதிப்போவியக் கலை (பிரிண்ட்டிங் மேக்கிங்) 10 இடங்கள், சுடுமண் வடிவமைப்பு (செராமிக் டிசைன்) 15 இடங்கள், துகிலியல் (டெக்ஸ்டைல்ஸ் டிசைன்) 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இக்கல்லூரியில் சேர தனி நுழைவுத் தேர்வு வைக்கப்படுகிறது. பிளஸ் 2 வகுப்பில் இருந்து 50 மதிப்பெண்களும், நுழைவுத் தேர்வில் 50 மதிப்பெண் என மொத்தம் 100 மதிப்பெண்களை கொண்டு தரவரிசை பட்டியல் வெளியிட்டு இடங்கள் நிரப்பப்படுகின்றன. பேச்சுலர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் பட்டப் படிப்பு முடித்தவர்கள், இதே கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படிக்க வசதி உள்ளது. இரு பாலருக்கான இக் கல்லூரியில் விடுதி வசதி இல்லாததால் வெளியில் தங்கி படிக்க வேண்டும்.
கலைத்துறை படிப்புக்கு வாய்ப்புகள் மிக குறைவு என தவறான கருத்து உள்ளது. இப் படிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எழுத்துத் துறை, சினிமாத் துறை, விளம்பரத் துறை, கல்விக் கூடங்கள், மல்டி மீடியா அனிமேஷன் இண்டஸ்டிரியல், ஆர்ட் பெயிண்ட் கேலரி, செராமிக் டிசைனர், இண்டீரியல் எக்ஸிபிஷன் டிசைனர், ஃபீரி லேன்சர் பெயிண்ட்டர் என வண்ணக்கலை படிப்பு முடித்தவர்களுக்கு பணி வாய்ப்பு மிகுதியாக உள்ளது.
இவ்வகை படிப்புகளை வெகு சிலரே எடுத்து படிப்பதால் பணி போட்டி கிடையாது.
தனித்திறமையும், மட்டற்ற ஆர்வம் மூலம் ஓவியக் கலையில் தனி முத்திரை பதித்து, பிரபலமாகும் வாய்ப்பும், வளமான வாழ்க்கையும் கைக்கூடும் படிப்பாக உள்ளது. ஆத்ம
திருப்தி, மன லயிப்பு, ஆர்வ மிகுதியால் கலைப் படிப்புகளை படிக்க விரும்புபவர்கள், அரசு நடத்தும் யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்று, வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவும் முடியும்.